Pages

Saturday, September 18, 2010

பகை முடிப்போம்

சாலையைக்   கழுவியதில் 

சேலையைத்   துவைக்கும் 
நிலைமாறு   வதெப்போது
 

பாலைத்  தேடியழும் 
பிள்ளைப் பேய்ப்பசியும் 
நீங்குவ தெப்போது
 

கூழையே  குடித்துதினம்  
வாழ்வையேமுடிக்குமவர் 
வாழ்வுமோர் வாழ்வோ
 

ஏழைபாழையவர் 
பிறர்க்கே  உழைத்துதினம்
நாளைக்கழித்தல் நன்றோ ?

சூளையில்வெந்திடும்

செங்கலாய்ஆலையில் 
கழனியில் வேகின்றார்
 

நாளை நல்லதொரு
வேளைவருமென 
தேவரை வணங்குகின்றார்
 

கூடியழுதுதினம்
கோயில்நாடிசுகம் 
கண்டமாந்தருண்டோ ?
 

கோடிகோடியாயவர் 
கூடிப்பகையறிந்து
முடித்தலே வழியன்றோ !

No comments:

Post a Comment